தற்போதைய செய்திகள்

 நிச்சயமான மறுநாள் கல்லூரி பேராசிரியை காணவில்லை :தந்தை புகார்

திருவள்ளூர் அருகே திருமணம் நிச்சயமான மறுநாள் கல்லூரிக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற கல்லூரி பேராசிரியையை காணவில்லை என தந்தை போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

ராம்கி

திருவள்ளூர் அருகே திருமணம் நிச்சயமான மறுநாள் கல்லூரிக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற கல்லூரி பேராசிரியையை காணவில்லை என தந்தை போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

 இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருவள்ளூரை அடுத்த தொழுவூரைச் சேர்ந்தவர் தெய்வீகம். இவரது மகள் குறிஞ்சிப்பிரியா (27). இவர் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

 இந்த நிலையில் மே 26-ம் தேதி குறிஞ்சிப்பிரியாவுக்கு, தொழுவூர் கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மறுநாள் வீட்டில் இருந்து வழக்கம் போல் கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற குறிஞ்சிபிரியா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

 பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தந்தை தெய்வீகம் போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் செவ்வாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT